Pages

Subscribe:

Tuesday, April 2, 2019

திருப்பதியில் இருப்பது முருகனா?

                                                                          Please Subscribe : V2 Channel

திருப்பதியில் தங்கம் வைரம் கொண்டு அலங்கரிக்கப்பட்ட அந்த சிலை பெருமாள் சிலையா அல்லது முருகன் சிலையா தெரியுமா?

அருணகிரிநாதர் 
எந்தவொரு ஆழ்வாரும் திருப்பதியின் பெருமை பற்றி பாடியதில்லை. அருணகிரிநாதர் திருப்பதியில் இருப்பது முருகன் என்பதை அறிந்து வேந்த குமரா குகசேந்தமயூர வடவேங்கட மாமலையில் உறையோனே என்று பாடியுள்ளார்.

பெயர்க்காரணம் 
வெங்கடேஸ்வரபெருமான் என்று வைணவப்பெயரில் ஈஸ்வரன் என்ற சைவப் பெயர் எப்படி வந்தது வேலை உடைய ஈஸ்வரன் என்பதே வெங்கடேஸ்வரன் என்று பொருள் தரும்.
குறிஞ்சி 
குன்று மலை இருக்கும் இடமெல்லாம் குறிஞ்சிக் கடவுள் முருகனே தெய்வம். அப்படி இருக்க திருப்பதி மலைமீது இருக்கும் சாமி முருகனாக இருப்பதில் ஆச்சர்யம் தேவையில்லை தானே.

திருவேங்கடம்  
திருவேங்கடம் = திரு + வேல் + இடம் திருவேலிடம் என்ற சொல்லே காலப்போக்கில் திருவேங்கடமாக மருவியிருக்கும்.

கோயில் அமைப்பு 
கோயில் அமைப்பு ஆகம முறைப்படி ஒரு முருகன் கோயில் எப்படி கட்டியிருக்கவேண்டுமோ அப்படித்தான் கட்டியுள்ளனர். விஷ்ணு கோயிலைப் போல் அல்ல.
கருடாழ்வார்  
கருடாழ்வார் பெரும்பாலான வைணவக் கோயில்களில் இருக்கும் கருடாழ்வார் இவ்வளவு புகழ் வாய்ந்த திருப்பதி கோயிலில் ஏன் இல்லை.

மறைக்கப்பட்ட தமிழ் கோயில் சுவர் முழுக்க சுண்ணாம்பால் மறைக்கப்பட்ட தமிழ் எழுத்துக்களை நீங்கள் பார்க்கமுடியும். அதற்கான காரணம் தெரியுமா?ஆராய்ச்சியாளர்களையே வாயை பிளக்க வைத்ததமிழகத்தின் மர்மங்களைப் பற்றி தெரியுமா?
கரங்கள் 
கரங்கள்   
ஏழுமலையானின் கரங்களை பாருங்கள். அப்படியே முருகன் சிலையில் இருக்கும் கரங்களின் வடிவத்தையே பெற்றுள்ளது.

சான்று  
கிருபானந்த வாரியார் கூட இதுகுறித்து தனது கந்தபுராண சொற்பொழிவுகளில் அடிக்கடி தன் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

கொடிமரம்  
கொடிமரம் இல்லாத விஷ்ணு, பெருமாள் கோயில் எங்கேயாவது பார்த்ததுண்டா நீங்கள்?

தெப்பகுளம் பெருமாள் கோயில் என்றாலே தெப்பக்குளம் இல்லாமல் இருக்குமா?

போலி கரங்கள் சங்கும் சக்கரமும் தனியாக ஒட்டப்பட்டுள்ளதாகவும், இரு கரங்கள் போலியாக இணைக்கப்பட்டுள்ளது என்றும் பலர் கூற கேட்டிருக்கிறோம். கோயிலுக்கு செல்லும்போது கூர்ந்து கவனியுங்கள்.

Please subscribe : V2 Channel

Image by FlamingText.com

Friday, August 3, 2018

முகத்திற்கு கொய்யா இலையின் பயன்கள்

                                                                                       Please Subscribe : V2 CHANNEL

முகத்தில் சுருக்கம் வருவது இன்று பெரும்பாலோர்க்கு உள்ள பிரச்சினையே. உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் குறைவால் இந்த சுருக்கங்கள் ஏற்படுகின்றது. அதிலும் குறிப்பாக இது இளமையை விரைவிலேயே இழக்க செய்துவிடும். இதற்கு சிறந்த தீர்வு கொய்யா இலையே. இதில் அதிகம் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளதால் முக சுருக்கத்தை போக்கி "என்றும் பதினாறு" போல தோற்றத்தை தரும். இந்த இலைகளை காயவைத்து பொடி செய்து நீருடன் கலந்து பேஸ்ட் போல முகத்தில் தடவினால் சுருக்கங்கள் மறையும்.

பலருக்கு இறந்த செல்கள் முகத்திலேயே தங்கி விடுகின்றன. இதனால் அவர்களுக்கு கரும்புள்ளிகள் வருகிறது. இது முக அழகையே முற்றிலுமாக கெடுத்து விடும். இதனை அகற்ற கொய்யா இலையை அரைத்து, அதனுடன் 1 ஸ்பூன் மஞ்சள் சேர்த்து முகத்தில் பூசவும். பின் 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவி விடவும். இந்த அழகு குறிப்பு உங்கள் காதலியின் முகத்தை கண்டிப்பாக தேவதை போல மாற்றும்.

உங்களின் காதலியின் சருமம் என்றுமே புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமென்றால் நம்ம கொய்யா இலை அதற்கு உதவும். கொய்யா இலையை அரைத்து கற்றாழை சாற்றுடன் சேர்த்து முகத்தில் பூசினால், முகம் எப்போதும் புத்துணர்வுடன் இருக்கும். அத்துடன் முகத்தில் புதிய செல்களை உற்பத்தி செய்து இளமையான முகத்தை தரும்.

சூரியனிடம் இருந்து வரும் புற ஊதா கதிர்கள், முகம் மற்றும் தோல்களையும் பாதிக்க செய்யும். சுற்றுசூழல் சீர்கேட்டால் இதன் பாதிப்பு இன்றைய காலகட்டத்தில் அதிகம் உள்ளது. இதனை சரி செய்ய கொய்யா இலையை வெயிலில் உலர வைத்து, பொடி செய்து பின் ஆலிவ் எண்ணெய்யுடன் கலந்து முகத்தில் ஃபேஸ் பேக் போல போடவும். 20 நிமிடம் கழித்து இதனை காட்டன் துணியால் துடைத்து விடவும். இது நல்ல பலனை தரும்.

உங்கள் காதலியின் முகம் மிகவும் வெண்மையாக இருக்க இந்த அழகு குறிப்பை பயன்படுத்துங்கள். கொய்யா இலையை அரைத்து அதனுடன் சிறுது ரோஸ் நீரை ஊற்றி கலக்கவும். பின் சிறிதளவு மஞ்சளையும் சேர்த்து முகத்தில் பூசி வந்தால் மினுமினுப்பான தேவதை போன்ற சருமம் பெறலாம்.

Image by FlamingText.com

Search This Blog